ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்திற்கான ரூ.300 தரிசன டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு நாளை முதல் தொடங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கான ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு நாளை காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் 6 லட்சம் ரூ.300-க்கான தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் நாளை மறுநாள்(25 ஆம் தேதி) காலை 9 மணிக்கு ஒரு நாளைக்கு 5 ஆயிரம் வீதம் மொத்தம் என 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாகவும்,இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும்,ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருப்பதி ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற நாளை முதல் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்றது. துபாயில் நேற்று…
சென்னை : பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகளை விற்பனை செய்யும் வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று (பிப்.24) "முதல்வர் மருந்தகங்கள்"…
துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது…
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…