ஆந்திரா:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதத் தரிசனத்திற்கு ரூ.300 டிக்கெட்டிற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்கப்படவுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்குகிறது.அதன்படி, சிறப்பு தரிசனத்திற்கு ரூ.300-க்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 9 மணி முதல் தொடங்குகிறது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி,தினமும் 20 ஆயிரம் வீதம் மொத்தம் 6 லட்சத்து 20 ஆயிரம்(ரூ.300-க்கான) தரிசன டிக்கெட்டுகளை விற்க தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.
அதே சமயம்,இலவச தரிசன டிக்கெட்கள் நாளை (25 ஆம் தேதி) காலை 9 மணி முதல் ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வீதம் மொத்தம் என 1 லட்சத்து 50 ஆயிரம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
அதன்படி,இலவச தரிசனத்தில் திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு நேரடியாக ஒரு நாளைக்கு 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும்,ஆன்லைனில் 5 ஆயிரம் டிக்கெட்கள் எனவும் தினந்தோறும் 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
மேலும்,திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசன டிக்கெட் பெற இன்று காலை 9 மணி முதல் https://www.tirumala.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை பார்வையிடாலம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…