Categories: இந்தியா

ஆளுநருக்கு எதிராக 6 மணிநேரமாக தர்ணா!!போராட்டம் தொடரும்!! நாராயணசாமி உறுதி

Published by
Dinasuvadu desk

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

பிப்ரவரி 11ம் தேதி முதல் புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் பயணிப்போர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில் டி.ஜி.பி சுந்தரி நந்தா அறிவித்திருந்தார்.

ஆனால் ஹெல்மெட் தலைக்கவசம் அணிவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும், உடனே அபராதம் கூடாது என்று முதல்வர் நாராயணசாமி  தெரிவித்திருந்தார். இந்த அறிவிப்பை ஆளுநர் ஏற்கவில்லை.இந்நிலையில்  முதலமைச்சரின் விருப்பத்திற்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக கூறி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி அதிருப்தியடைந்தார்.

 

இதனால் கருப்பு சட்டை அணிந்து ஆளுநர் மாளிகைக்கு எதிரே தர்ணாவில் ஈடுபட்டார்.  அதேபோல் கிரண்பேடியை கண்டித்து 68 மணிநேரத்துக்கும் மேலாக நாராயணசாமி தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.தர்ணாவில் இருந்துகொண்டே  அரசுப் பணிகளை கவனிக்கிறார். அரசு கோப்புகளை பார்த்து கையெழுத்திட்டு வருகிறார்.

பின்னர்  கோரிக்கை கடிதம் குறித்து நேரடியாக ஆலோசனை நடத்துவதற்கு வரும் 21-ம் தேதி காலை 10 மணிக்கு வரும்படி புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு, துணை நிலை கிரண்பேடி கடிதம் எழுதியுள்ளார்.அதேபோல்  கடிதம் குறித்து பரிசீலிப்பதற்கு போதிய அவகாசம் கொடுக்காமல், தங்களது அமைச்சரவை சகாக்களுடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளது சட்டத்திற்கு புறம்பானது என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறுகையில், எங்களுடைய கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்.தங்களுடைய கோரிக்கை தொடர்பாக 6-ம் தேதி கடிதம் கொடுத்துள்ளோம் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அதேபோல் புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமசிவாயம் அழைப்பு விடுத்துள்ளார்.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

2 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

15 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

20 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

20 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

20 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

20 hours ago