ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டம், லம்தாபுத் கிராமத்தில் ஒரு அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக பிரபுல்லா குமார் பதி பணி புரிகிறார். இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுப்பதில் புதிய யுக்தியை கையாள்கிறார்.
இந்த தலைமை ஆசிரியர் மாணவர்களிடையே படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில், நடனம் மற்றும் இசை வடிவில் மாணவர்களுக்கு படங்களை கற்பிக்கிறார். இவரது இந்த செயல் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இவரது இந்த செயலால் கவர்ந்திழுக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் அவரை ‘டான்சிங் சார்’ என்று அழைக்கின்றனர். இதுகுறித்து பிரபுல்லா குமார் பதி அவர்கள் கூறுகையில், பாட்டு பாடி, நடனம் ஆடியபடி வேடிக்கைகையுடன் பாடம் சொல்லி கொடுப்பதை மாணவர்கள் விரும்புவதாகவும், இதனால் பள்ளிக்கு வருவதை மாணவர்கள் அதிகமாக விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், இவர் இந்த சிறந்த யுக்தியை 2008-ம் ஆண்டு முதல் பின்பற்றி வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோவை அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவரது இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…