இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 886 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 30,14,073 பேர் ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 2,07,906 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,88,543 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,87,322 பேர் பாதிக்கப்பட்டு, 55,415 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,380 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 886 ஆகவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 6,362 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதிகப்படியாக மகாராஷ்டிராவில் 8,068 பேர் பாதிக்கப்பட்டு, 342 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,188 ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…