இந்தியாவில் பாதிப்பு 24,942 ஆகவும், உயிரிழப்பு 779 ஆகவும் உயர்வு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 779 ஆகவும் அதிகரித்துள்ளது.

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி உலகளவில் 28,49,185 பேர் பாதிக்கப்பட்டு, 1,98,063 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை வைரஸில் இருந்து 8,12,137 பேர் குணமடைந்துள்ளார்கள். அதிகப்படியாக அமெரிக்காவில் 9,25,758 பேர் பாதிக்கப்பட்டு, 52,217 பேர் பலியாகியுள்ளனர்.

இதையடுத்து இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,942 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 779 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸில் இருந்து இதுவரை 5,210 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 6,817 பேர் பாதிக்கப்பட்டு, 301 பேர் பலியாகியுள்ளனர். இதைத்தொடர்ந்து குஜராத்தில் 2815, டெல்லியில் 2514, ராஜஸ்தானில் 2034, மத்திய பிரதேசத்தில் 1952, தமிழ்நாட்டில் 1821, உத்தரபிரதேசத்தில் 1778 என அதிகப்படியாக இந்த மாநிலங்களில் கொரோனா பாதித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்