தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது.
இந்தியாவில் தீவிரமடைந்து வரும் கொரோனா என்ற கோவிட் 19 வைரசால் தினந்தோறும் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. வைரஸ் பரவல் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில், அதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,700 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 686 ஆகவும் உயர்ந்துள்ளது. ஒருபக்கம் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது மனதிற்கு சற்று மகிழ்ச்சியை தருகிறது. இதுவரை 4,325 பேர் வைரஸில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை அமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 5,652 பேர் பாதிக்கப்பட்டு, 269 பேர் பலியாகியுள்ளனர். 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 2,407, டெல்லியில் 2,248, ராஜஸ்தானில் 1,890, மத்திய பிரதேசத்தில் 1,695, தமிழ்நாட்டில் 1,629 மற்றும் உத்தரபிரதேசத்தில் 1,509 பேர் என அதிகப்படியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே உலகளவில் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இதுவரை 26,58,794 பேர் பாதிக்கப்பட்டு, 1,85,440 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பின்னர் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,30,024 பேர் குணமடைந்துள்ளார்கள். உலகளவில் அதிகப்படியாக அமெரிக்காவில் 8,49,092 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, 47,684 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…