இன்று மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் ஆம்பன் புயல்.
இந்தியா கொரோனா எனும் பெரும் அரக்கனை சந்திட்து வரும் நிலையில் புதிதாக ஆம்பன் புயல் உருவாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த ஆம்பன் புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், இந்தியா இரு மாபெரும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தேசிய பேரிடர் மீட்பு படையின் தலைவர் எஸ்.என்.பிரதான் தெரிவித்துள்ளார். மேலும் கூறிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வலுவான புயலாக ஆம்பன் புயல் தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி மேற்கு வங்கத்தை நோக்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த புயல் இன்று மதியம் மேற்கு வங்கத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீடபு படையின் 41 குழுக்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு விரைந்துள்ளன. மேலும், அதன் தலைவர் எஸ்.என். பிரதான் அளித்துள்ள பேட்டியில், ஏற்கனவே கொரோனா பாதிப்பு மேற்கு வங்கத்தில் கடுமையாக இருக்கும் சூழலில் ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கையாக கடலோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். முதன் முறையாக கொரோனா மற்றும் ஆம்பன் புயல் என இரு பெரும் சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். இந்த புயல் இன்று மதியம் சுமர் 180 கிலோ மீட்டர் வேகத்தில் ஆம்பன் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…