Categories: இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு., மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு.!

Published by
மணிகண்டன்

டெல்லி : நடப்பாண்டு மருத்துவ சேர்க்கைக்காக அண்மையில் நடைபெற்று முடிந்த நீட் நுழைவுத்தேர்வில் பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில மையங்களில் நீட் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நடைபெற்றது. நீட் மருத்துத்தேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கைகள் முன்னதாக உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

அதனை தொடர்ந்து இன்று இந்த வழக்கில் சில முக்கிய உத்தரவுகளை மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கூறியுள்ளது. அதன்படி,  நீட் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகளை தேசிய தேர்வு மையம் ஒழுங்குபடுத்த வேண்டும். நீட் வினாத்தாள்களை கொண்டு செல்கையில் பாதுகாப்பான வாகனங்களை பயன்படுத் வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .

மேலும், தேர்வு முறையில் இணையப் பாதுகாப்பு, மேம்பட்ட அடையாளச் சோதனைகள், தேர்வு மையங்களின் சிசிடிவி கண்காணிப்பு ஆகியவற்றில் உள்ள பலவீனங்களைக் கண்டறிந்து  அதில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை புகுத்தி சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசால் அமைக்கப்பட்ட தேர்வு குழு உறுதியளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

NEET-UG 2024 வினாத்தாள்களில் முழுதான விதிமீறல் எதுவும் இல்லை. வினாத்தாள் கசிவு என்பது பாட்னா மற்றும் ஹசாரிபாக் பகுதிகளில் மட்டுமே நிகழ்ந்துளளது. அதுபற்றிய விசாரணையை சிபிஐ தொடர்ந்து வருகிறது.

தேசிய தேர்வு முகமையின் செயல்முறைகளில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் தனது தீர்ப்பில் எடுத்துக்காட்டியுள்ளதாக உச்ச நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. தற்போது எழுந்துள்ள பிரச்னைகள் மீண்டும் நிகழாமல் இருக்க, இந்த ஆண்டிலேயே மத்திய அரசு நீட் விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago