மத்திய அரசானது, கொரோனா நோயாளிகளுக்கு போடப்படும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மற்றும் அதன் மூலப் பொருட்களுக்கு விதிக்கப்படும் சுங்க வரியை ரத்து செய்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2வது அலையானது மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது.மேலும்,கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால்,தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பானது 2லட்சத்து 50ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதனையடுத்து,நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்,பொதுநலனைக் கருத்தில் கொண்டு மத்திய அரசானது சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதாவது,நாட்டில் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவுவதால் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் ரெம்டெசிவெர் தடுப்பூசி மருந்தின் மீதான சுங்க வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.மேலும்,இந்த உத்தரவானது வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனக் கூறியுள்ளது.இந்த உத்தரவினால்,தேவைக்கு ஏற்ற அளவில் ரெம்டெசிவெர் கிடைக்கும் என்றும்,இதன்மூலம் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு குறையும் என்றும் மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னதாக,உள்நாட்டு தேவை கருதி,ரெம்டெசிவெர் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…