Shocking:வாடிக்கையாளர்களே…வட்டி விகிதம் அதிகரிப்பு- HDFC அறிவிப்பு!

Published by
Edison

நாட்டின் முன்னணி வீட்டுக் கடன் போன்றவை வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் தனது வாடிக்கையாளர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.ஆம்,HDFC லிமிடெட் வாடிக்கையாளர்களின் EMI அதிகரிக்கப் போகிறது.ஏனெனில்,வீட்டுக் கடன் வழங்குநரான ஹெச்டிஎஃப்சி லிமிடெட் அதன் பெஞ்ச்மார்க் கடன்(benchmark lending rate) விகிதத்தை 0.05 சதவீதம் உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், எச்டிஎஃப்சி லிமிடெட் நிறுவனத்திடம் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர தவணை (EMI) அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில்,HDFC நிறுவனம் வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்துகிறது.”HDFC ஆனது மே 1, 2022 முதல் வீட்டுக் கடன்களுக்கான ரீடெய்ல் ப்ரைம் லெண்டிங் ரேட்டை (RPLR) 0.05 சதவிகிதம் உயர்த்தியுள்ளது” என்று நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இருப்பினும், புதிய வாடிக்கையாளர்களுக்கு வட்டி உயர்வு இருக்காது எனவும், அவர்களுக்கான வட்டி விகிதம் கடனின் அளவு மற்றும் காலத்தைப் பொறுத்து 6.70 முதல் 7.15 சதவீதம் வரை இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.இந்த உயர்வு மே 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

HDFC இன் கடன் விகிதங்களில் இந்த அதிகரிப்பு மற்ற வங்கிகள் எடுத்த நடவடிக்கைகளுக்கு ஏற்ப உள்ளது.அதன்படி,முன்னதாக,ஏப்ரல் மாதத்தில்,நாட்டின் மிகப்பெரிய அரசு வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) மற்றும் பரோடா போன்ற வங்கிகள் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை உயர்த்தியுள்ளன என்பது குறிப்பிடதக்கது.

Recent Posts

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

கந்தூரி விழா : காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை (08.02.2025) உள்ளூர் விடுமுறை!

புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட புதுச்சேரி…

32 minutes ago

மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் அல்வாதான் இப்போ ஃபேமஸ்! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

திருநெல்வேலி : முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (7.2.2025) திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு விழாவில், 75,151 பயனாளிகளுக்கு 167 கோடி ரூபாய்…

51 minutes ago

ரோஹித் சர்மா பார்ம் சரியில்லை! சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கேப்டனை மாற்றும் பிசிசிஐ?

டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி  தொடர் இந்த மாதம் தொடங்கப்படவுள்ள நிலையில், இந்திய அணி ரசிகர்களின் முழு கவனமும் ரோஹித் ஷர்மாவின்…

1 hour ago

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து…

2 hours ago

2வது போட்டியிலும் விராட் கோலி இல்லையா? ஆட்ட நாயகன் கில் சொன்ன பதில்!

ஒடிசா : வருகின்ற 9ம் தேதி கட்டாக்கில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாட…

2 hours ago

மகா கும்பமேளா – சங்கராச்சாரியார் மார்க் பகுதியில் பயங்கர தீ!

உத்தரப் பிரதேசம் : பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் 4ஆவது முறையாக, மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. செக்டார்-18…

3 hours ago