2nd phase polling status current [fil image]
Election2024: இன்று நடைபெற்று இரண்டாம் கட்ட மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் வாக்கு பதிவாகியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று காலை மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இளைஞர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் என வாக்களிக்க தகுதியுள்ள அனைவரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக 68.92% வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 43.01% வாக்குகளே பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
கேரளா 20, கர்நாடகா 14, ராஜஸ்தான் 13, மத்தியப் பிரதேசம் 6, மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் தலா 8, அசாம், பீகார் மாநிலத்தில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தலா 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகளில் 2ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…