ஊரடங்கு தளர்வு.! எவை எல்லாம் இயங்கும்.! எவை எல்லாம் இயங்காது.!

Published by
murugan

இன்று முதல் விவசாயம், மீன்பிடித்தல் உள்ளிட்ட தொழில்களுக்கு அனுமதி.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் ஊரடங்கு மே -03-ம் தேதி வரை மேலும் நீட்டித்து பிரதமர் மோடி உத்தரவிட்டார்.இதையெடுத்து மத்திய அரசு வெளியிட்ட புதிய வழிக்காட்டி நெறிமுறைகளில் முன்பை விட வருகின்ற 20 -ம் தேதி (அதாவது இன்று) சில தொழில்களை இயங்க மத்திய அரசு அனுமதி கொடுத்தது.

பொருளாதார வீழ்ச்சி காரணமாக சில தொழில்களை இயங்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அது இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில், பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ, டாக்சிகள் ஓடாது திரையரங்குகள், மால்கள், பூங்காக்கள்,  மத வழிபாடுகள் போன்றவற்றிக்கு தொடர்ந்து விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.

 

பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டாலும் ஆன்லைன் மூலம்  வகுப்புகள் நடத்தலாம் என கூறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் குறைந்த நபர்களுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரியர், மின்பழுது பார்ப்பவர், தச்சர், சாலை கட்டுமான பணியாளர் போன்றவர்களுக்கு பணி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் கட்டுமான பணிகளை தொடர நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, கட்டுமானம் நடைபெறும் இடங்களில் தற்போது தங்கியிருக்கும் தொழிலாளர்களை கொண்டு பணிகளில் ஈடுபடலாம். ஆனால் புதிதாக வெளியூர்களிலிருந்து கட்டுமான தொழிலாளர்கள் அழைத்து வேலையில் ஈடுபடுத்தக்கூடாது.

விவசாயத்திற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன. அறுவடை, சந்தைப்படுத்துதல், மாநிலம் விட்டு மாநிலம் கொண்டு செல்வதற்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ளது. ஐ.டி நிறுவனங்களில் 50 % ஊழியர்கள் கொண்டு வேலை செய்யலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

 மீன்பிடித்தொழில், மீன் சந்தை இயங்க அனுமதி.தினக்கூலி தொழிலாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே வேலை செய்யலாம், வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.மேலும், மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கு ஏற்ப முடிவெடுத்து ஊரடங்கு தளர்வுவை  அமல்படுத்தலாம் என மத்திய அரசு கூறியுள்ளது.

Published by
murugan

Recent Posts

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

18 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

42 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 hour ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago