மகாராஷ்டிரா அரசு நேற்று ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது. மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சில தளர்வுகளை இந்த உத்தரவில் அளிக்கப்பட்டுள்ளது .
அன்லாக் 3 வழிகாட்டுதல்கள் நேற்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. உத்தரவுப்படி, சினிமா அரங்குகள், , நீதிமன்றங்கள் மற்றும் உணவகங்கள் இல்லாத மால்கள் மற்றும் சந்தை வளாகங்கள் ஆகஸ்ட் 5 முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். முக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும்.
அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் . ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், வெளிப்புற பூப்பந்து மற்றும் அணி அல்லாத விளையாட்டுக்கள் உடல் ரீதியான தூரத்தோடு அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 14,463 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 2,39,755 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.84 சதவீதமாக உள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…