ஊரடங்கு நீட்டிப்பு: பிரதமர் மோடி உரையின் முக்கிய 10 அம்சங்கள்.!

Published by
பாலா கலியமூர்த்தி

பிரதமர் மோடி உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். அதில், இங்கு முக்கிய 10 அம்சங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் கொரோனா தீவிரம் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நேற்று அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். தற்போது, நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார். இந்த உரையாடலில் கொரோனா தடுப்பு குறித்தும் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றியும் பேசியுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களை பற்றி காண்போம்.

  • ரூ.20 லட்சம் கோடிக்கு பொருளாதார சிறப்பு திட்டங்களை அறிவித்துள்ளார். சிறப்பு திட்டங்கள் மூலம் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
  • இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இருக்கும். உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு பொருட்கள் மற்றும் சேவைகள் அளிப்பதில் இந்தியா முக்கிய இடம்பெற வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
  • உலகிற்கே இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா பயிற்சிகள் ஆகும் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
  • உலக நாடுகளுக்கு இந்திய மருந்துகளே கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னம்பிக்கையை கொடுத்து வருகிறது.
  • நம்நாட்டில் கொரோனா பாதிப்பை சமாளிக்க உள்நாட்டு தொழில்துறையே கைகொடுத்திருக்கிறது.
  • கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 4வது கட்ட ஊரடங்கை பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் இதன் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
  • தன்னிறைவு பெற்ற நாடாக இந்தியா மாறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் கொரோனாவுக்கு பின் உலகை இந்தியா முன்னின்று வழிநடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
  • இந்தியாவுக்கு முக்கியமான வாய்ப்பை இந்த கொரோனா வைரஸ் தந்துள்ளது. உலகிற்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.
  • யாரையும் சாராமல் தன்னம்பிக்கையுடன் இருப்போம் என 130 கோடி இந்தியர்களும் உறுதி ஏற்க வேண்டும் என்று பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

32 minutes ago
ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

56 minutes ago
ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago
வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago
தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago