ஊரடங்கு நீட்டிப்பு: இன்று முதல் திரையரங்குகள் திறக்க அனுமதி.. எங்கே தெரியுமா?

Published by
பாலா கலியமூர்த்தி

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் இன்று முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மதுபானக் கூடங்கள், கடைகள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம் என்றும் தனியார் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்குவதற்கும் அனுமதி வழக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்ச்சிகளில் 100 பேரும், இறப்பு மற்றும் இறுதி சங்கு போன்ற துக்க நிகழ்ச்சிகளில் 20 பேரும் கலந்துகொள்ளலாம். இதுபோன்று கடற்கரை சாலை, பூங்காக்கள், தோட்டங்கள் 50 சதவீத பேருடன் இயங்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று  ஆகஸ்ட் 1 முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்கலாம் என்றும் இரவு 9 மணிக்குப் பின் காட்சிகள் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் அதிகபட்சம் 100 பேர் மட்டும் பங்கேற்கலாம். குறிப்பாக முகக்கவசம், தனி மனித இடைவெளி ஆகிய கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடனும், புதிய தளர்வுகள் இன்றி வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, புதுச்சேரியிலும் நேற்றுடன் ஊரடங்கு முடியும் நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

15 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago