ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனாவா அடுத்த 3 மாதங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – சத்திஸ்கர் அரசு
சத்திஸ்கர் மாநிலத்தில் நேற்று மட்டும் 25 பேருக்கு கொரோனா பாப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் என்னகை 92 ஆக உயர்ந்துள்ளது .இந்த எண்ணிக்கை தான் கடந்த இரண்டு மாதத்தில் உயர்ந்த அதிகபட்ச்ச எண்ணிக்கையாகும் .
இதுகுறித்து சத்திஸ்கர் சுகாதாரத்துறை கூறுகையில் , இதுவரை 59 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் 33 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் ,இதுவரை 34,633 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .
நேற்று ஒரு நாளில் மட்டும் இதுவரை இல்லாத பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வந்துள்ளதால் தொற்று பரவ வாய்ப்பிருப்பதகவும் ,இதனால் அடுத்த மூன்று மாதங்களுக்கு 144 தடை உத்திரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.இந்தியா முழுவதும் வரும் 31 தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .