மே 1 வரை ஊரடங்கு நீட்டிப்பு – பஞ்சாப் அரசு அறிவிப்பு.!

Default Image

நாடு முழுவதும் வரும் 14ம் தேதி ஊரடங்கு நிறைவடையும் நிலையில், பஞ்சாபில் மே 1 வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பஞ்சாப் மாநிலத்தில் மே 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒடிசாவில் ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் மே 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 101 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. 

இதனிடையே நாளை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்