புதுச்சேரியில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு..! தளர்வுகள் என்னென்ன..!

Default Image

கொரோனா பரவல் காரணமாக புதுச்சேரியில் புதிய தளர்வுகளோடு ஊரடங்கை ஜூன் 30 வரை நீட்டித்துள்ளனர்.

கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்ததை அடுத்து புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஜூன் 21 வரை அறிவித்த ஊரடங்கை தற்போது மேலும் நீட்டித்து ஜூன் 30 வரை புதிய தளர்வுகளோடு அறிவித்துள்ளனர். இதில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் பின்வருமாறு:

  • திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் 100 பேரை கொண்டு தொடங்க அனுமதி.
  • மதுக்கடைகள் உட்பட அனைத்து வித கடைகளும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
  • பூங்காக்கள் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி.
  • அனைத்து தனியார் நிறுவனங்கள் 100% பணியாளர்களோடு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதி.
  • பொதுப் போக்குவரத்து காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதி.
  • திரையரங்கு மற்றும் வணிக வளாகங்கள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்