கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊரடங்கு நீடிப்பு…! – முதல்வர் எடியூரப்பா

Default Image

 கர்நாடகம் முழுவதும், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து, இந்த மாதம் 7-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், 7-ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் கர்நாடகம் முழுவதும் ஜூன் 14-ஆம் தேதி முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது உள்ள ஊரடங்கு விதிமுறைகளே தொடரும் என்று கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இருந்தே கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் தற்போது ஊரடங்கை தளர்த்தினால், மேலும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் என்றும், மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கு சிரமம் ஏற்படும் என்றும் மருத்துவர்கள் குழு முதல்வர் எடியூரப்பாவுக்கு பரிந்துரை வழங்கியது. மருத்துவ வல்லுநர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் தான்  ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்