கிரிப்டோகரன்சியால் மிகப்பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்பு – மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

Published by
Edison

உலக அளவில் கிரிப்டோகரன்சியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில்,கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்து என்றும் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவிக்கு அவை பயன்படுத்தப்படலாம் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக,அமெரிக்காவில் நடைபெறும் சர்வதேச நாணய நிதியத்தின் கருத்தரங்கில் பங்கேற்று பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கூறுகையில்: “எல்லா நாடுகளுக்கும் கிரிப்டோகரன்சி மிகப்பெரிய ஆபத்துதான்.ஏனெனில்,பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதற்காக அத்தகைய நாணயம் பயன்படுத்தப்படும் வகையில் உள்ளது.

இந்த முறைகேடுகளை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒழுங்குபடுத்துவதே ஒரே பதில் என்று நான் நினைக்கிறேன். இதனால்,தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் கட்டுப்பாடு மிகவும் திறமையானதாக இருக்க வேண்டும்”,என்று பேசினார்.

மேலும்,டிஜிட்டல் உலகில் இந்தியாவின் செயல்திறன் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான மத்திய அரசின் முயற்சிகளை சீதாராமன் எடுத்துரைத்தார்,கொரோனா தொற்றுநோய்களின் போது இந்தியாவில் டிஜிட்டல் பயன்பாட்டு விகிதம் அதிகரித்ததை வலியுறுத்தினார்.

இதற்கு முன்னதாக,மார்ச் மாதம் நடைபெற்ற இந்தியா டுடே மாநாட்டில் நிர்மலா சீதாராமன் பேசுகையில்:”கிரிப்டோகரன்சி அல்லது பிளாக்செயின் மற்றும் ஃபின்டெக் என்று வரும்போது இந்தியா அனைத்து விருப்பங்களையும் நிறுத்தவில்லை.இந்தியாவில் கிரிப்டோகரன்சி விதிமுறைகளை உருவாக்குவது குறித்த அனைத்து விவரங்களையும் வழங்கும் இந்த விஷயத்தில் அமைச்சரவைக் குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது”,என்று கூறியிருந்தார்.

மேலும்,2022 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி இந்தியாவின் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செயல்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago