உயிருள்ள நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரர்கள் – விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

Published by
Rebekal

உயிருடன் இருந்த நாயை வண்டியின் பின்புறம் கட்டி இழுத்து சென்ற இருவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இருசக்கர வாகனத்தில் நாயை கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென அப்படியே இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்நிலையில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோவில் இருக்கும் வண்டி நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஹித்தேஸ் படேல் என்பவர் தான் இந்த நாயை வண்டியில் கட்டி இழுத்துச் சென்றவர் என்பதை கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், அவருடன் நடத்திய விசாரணையில் அவர் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் இருந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில், அந்த நாய் உயிர் இழந்து விட்டது. அதனை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பகிரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய் உயிருடன் இருப்பதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிவதாகவும், அவர்கள் அந்த வீடியோவில் பேசும் பொழுது கூட நாய் இறந்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹித்தேஸ் மற்றும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் நண்பர் மீது விலங்குகள் வதை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சாலையில் இழுத்து சென்ற நாய் தற்பொழுது உயிர் இழந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ் : நாளை விண்ணில் பாய்கிறது எலான் மஸ்கின் க்ரூ டிராகன்!

வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…

7 hours ago

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

8 hours ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

8 hours ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

9 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

10 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

12 hours ago