உயிருள்ள நாயை வண்டியில் கட்டி இழுத்து சென்ற கொடூரர்கள் – விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு!

Published by
Rebekal

உயிருடன் இருந்த நாயை வண்டியின் பின்புறம் கட்டி இழுத்து சென்ற இருவர் மீது விலங்குகள் வதை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத்தில் இருசக்கர வாகனத்தில் நாயை கட்டியவாறு இரண்டு பேர் தரதரவென அப்படியே இழுத்து செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இந்நிலையில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் வீடியோ ஆதாரத்துடன் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வீடியோவில் இருக்கும் வண்டி நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளியை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதில் ஹித்தேஸ் படேல் என்பவர் தான் இந்த நாயை வண்டியில் கட்டி இழுத்துச் சென்றவர் என்பதை கண்டறிந்து தற்போது கைது செய்துள்ளனர்.

மேலும், அவருடன் நடத்திய விசாரணையில் அவர் தூய்மை பணியாளராக பணியாற்றுபவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவருடன் இருந்த அவரது நண்பர் தற்போது தலைமறைவாகி இருக்கும் நிலையில், அந்த நாய் உயிர் இழந்து விட்டது. அதனை அடக்கம் செய்ய எடுத்துச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது பகிரப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். ஆனால் வீடியோவை பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நாய் உயிருடன் இருப்பதை வீடியோவில் தெளிவாக பார்க்க முடிவதாகவும், அவர்கள் அந்த வீடியோவில் பேசும் பொழுது கூட நாய் இறந்ததாக கூறவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து ஹித்தேஸ் மற்றும் தலைமறைவாக உள்ள அவரது நண்பர்கள் நண்பர் மீது விலங்குகள் வதை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்கள் சாலையில் இழுத்து சென்ற நாய் தற்பொழுது உயிர் இழந்து விட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

3 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

37 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago