1 ரூபாயை மட்டும் வாங்கி கொள்ளும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரனின் இறுதி சடங்குக்கு ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தை சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஹுச்சா பஸ்யா எனும் 45 வயதுடைய பிச்சைக்காரர் ஒருவர் ஹடகாலி நகரப்பகுதியில் அமர்ந்திருந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். இவருக்கு யாராவது நன்கொடையாக பணம் கொடுத்தால் அவர் அவர்களிடமிருந்து ஒரு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி தொகையை திருப்பிக் கொடுத்து விடுவாராம்.
வற்புறுத்தி அதிக பணம் கொடுத்தாலும் அவர் வாங்க மறுத்து விடுவாராம். இதனாலேயே இவர் பலருக்கும் அறிமுகமான ஒருவராக இருந்துள்ளார். மேலும், இந்த பிச்சைக்காரருக்கு நன்கொடை வழங்குவது தங்கள் அதிர்ஷ்டமாக அப்பகுதி மக்கள் கருதியுள்ளனர். இந்த பிச்சைக்காரர் துரதிஸ்டவசமாக தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
இவரது இறுதி ஊர்வலத்தின்போது அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்துள்ளனர். ஒரு பிச்சை எடுக்கக்கூடிய மனிதனாக இருந்தாலும் அவர் மக்களிடையே எவ்வளவு தூரம் நற்பெயர் சம்மதித்துள்ளார் என்பது பலரையும் வியக்க வைத்துள்ளது.
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…
டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…