மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் பகுதியிலுள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி போலீசார், குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைன் பகுதியில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் நேற்று சுவாமி தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டமாக சென்றுள்ளனர். இந்த கோவிலில் கூடியிருந்த பக்தர்கள் அனைவருமே சமூக விலகலை கடைபிடிக்காமல் கூடியிருந்துள்ளனர். அப்பொழுதும் அந்த கோவிலுக்குள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் முன்னாள் முதல்வர் உமா பாரதி ஆகியோர் வந்துள்ளனர். இதனால் ஏற்கனவே சுவாமி தரிசனத்திற்க்காக கூடியிருந்த மக்கள், விஐபி- க்களை பார்ப்பதற்காக கோவிலுக்குள் முண்டியடித்து சென்றுள்ளனர்.
இதனால் மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வளையமும் உடைந்துள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திகைத்துள்ளனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். மேலும், பக்தர்களை கட்டுப்படுத்த முயன்ற போலீசார் பலரும் காயமடைந்துள்ளனர். கொரோனா காலத்தில் சமூக விலகலை கடைபிடிக்காமல் மக்கள் கூட்ட நெரிசலில் முண்டியடித்து செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில்…
சேலம் : ஆத்தூரில் இருந்து வானவரம் மலை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…
ஆஸ்திரேலியா : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. பாகிஸ்தான் நடத்தும் இந்த…
சென்னை : அத்திக்கடவு-அவிநாசி 17 ஆகஸ்ட் 2024 அன்று நிறைவேற்றுப்பட்டது. இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி…