Criminal:5 ஆண்டுகளில் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் -உள்துறை அமைச்சகம்

Default Image

டெல்லி:கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் எண்ணிக்கை குறித்து ராஜ்யசபாவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய்.

2017 முதல் 2022 மார்ச் 30 வரை பல்வேறு பிரிவுகளின் கீழ் 22 ஐபிஎஸ் அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நித்யானந்த் ராய் புதன்கிழமை ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் தப்பியோடியதாக அறிவிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறித்து கேட்டதற்கு, மாநில அரசு அளித்த தகவலின்படி, ஒரு ஐபிஎஸ் அதிகாரி தப்பியோடியதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்