கடந்தாண்டை விட நடப்பாண்டில் நாட்டின் பல இடங்களில் நடக்கும் குற்ற சம்பவங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஹரியானா போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் முறையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது . கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அத்தியாவசிய தேவைக்கு அல்லாமல் வீட்டுக்கு வெளியே செல்ல கூடாது என்றும், பேருந்து, விமானம் உள்ளிட்ட போக்குவரத்து வசதிகள் குறைத்தும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டாலும், குற்றங்கள் நடைபெறுவது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆம் கடந்த 2019-ன் முதல் 6 மாதங்களை ஒப்பிடுகையில் இந்தாண்டின் முதல் 6 மாதங்களில் நாட்டிலுள்ள பல இடங்களில் குற்ற சம்பவங்கள் குறைந்ததாக கூறப்படுகிறது. பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டின் முதல் 6 மாதங்களில் 20.46% வரை குறைந்துள்ளதாக ஹரியானா போலீசார் கூறியுள்ளனர். மேலும் 18.18% கற்பழிப்பு வழக்குகளும், 27.14% கடத்தல் வழக்குகளும் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…
லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது ரசிகர்களுக்கும் அணி…
கோவை : ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…