கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பு இருக்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ கிடைக்கக்கூடும். ஆனால், தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பின்பு விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 2021 க்குள் இந்தியாவுக்கு 60-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, உரிமம் பெறுவதற்கு டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நேரம் தேவைப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, புனேவைச் சேர்ந்த மருந்து SII, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கட்டம் 2 மற்றும் 3 சோதனைகளை நடத்தி வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 700-800 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும்.
இதற்கிடையில், மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் வளர்ச்சியின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளன. அவற்றில் 2 தடுப்பூசி இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்டத்திலும் உள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…
சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…
சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…