கொரோனா தடுப்பூசி டிசம்பர் மாதத்திற்குள் தயாராக வாய்ப்பு இருக்கிறது என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் இந்தியாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ கிடைக்கக்கூடும். ஆனால், தடுப்பூசிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பின்பு விற்பனைக்கு வரும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
மேலும், மார்ச் 2021 க்குள் இந்தியாவுக்கு 60-70 மில்லியன் டோஸ் கோவிஷீல்ட் கொரோனா வைரஸ் தடுப்பூசி கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான, உரிமம் பெறுவதற்கு டிசம்பர் முதல் மார்ச் வரையிலான நேரம் தேவைப்படும் என்று சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுரேஷ் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
தற்போது, புனேவைச் சேர்ந்த மருந்து SII, கொரோனா வைரஸ் தடுப்பூசியின் கட்டம் 2 மற்றும் 3 சோதனைகளை நடத்தி வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் 700-800 மில்லியன் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க முடியும்.
இதற்கிடையில், மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் வளர்ச்சியின் மேம்பட்ட கட்டங்களில் உள்ளன. அவற்றில் 2 தடுப்பூசி இரண்டாம் கட்டத்திலும், ஒன்று மூன்றாம் கட்டத்திலும் உள்ளது என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…