கொவைட்-19 விவகாரம்… ரோம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் பறந்தது…

Default Image

கொவைட்-19  வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரோம் நகரில் உள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த 787 டிரீம்லைனர் என்ற  விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது. இந்த விமானம் அங்கு தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லிக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று முதல் இந்தியாவில்,  ஒரு வாரத்திற்கு  சர்வதேச விமானங்கள் தரையிறங்க  அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்