மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் சீரம் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை அறிவித்தது. அதில், கொரோனா வைரஸ் தடுப்பூசியான கோவிஷீல் தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 மற்றும் மாநில அரசுகளுக்கு ரூ.400 என அறிவித்தது. ஆனால் அதற்கு முன் ரூ.250-க்கு கோவிஷீல்டு தடுப்பூசி விற்பனை செய்யப்பட்ட நிலையில் அதன் விலை இருமடங்காக உயர்ந்தது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, மத்திய அரசுக்கு 150-க்கு கொடுக்கும் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக கடும் எதிர்ப்பு எழுந்தது. நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பை அடுத்து மாநிலங்களுக்கு வழங்கும் கோவிஷீல்டு தடுப்பூசி விலையை சீரம் நிறுவனம் குறைத்துள்ளது.
இந்நிலையில், மாநில அரசுகளுக்கு சீரம் இந்தியா நிறுவனம் கொரோனா தடுப்பூசி விலையில் 25% குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.300 விற்கப்படும் எனவும் தனியார் மருத்துவமனைக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் மாற்றமில்லை என சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…