ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த கொரோனா தொற்றுள்ள கர்ப்பினி பெண்கள்…அகர்தலாவில் மகிழ்ச்சி !

Published by
Hema

அகர்தலாவில் கொரோனா தொற்றுள்ள 225 கர்ப்பினி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுத்த மகிழ்ச்சி சம்பவம்….

இந்தியாவில் கொரோனா 2 வது அலையின் பாதிப்பானது நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. அதில் உயிரிழப்புகள், பொருளாதார சரிவு, மக்களின் வேலையில்லா திண்டாட்டம் போன்றவைகளும் அடங்கும். இந்த சூழலில் அகர்தலாவில் கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் பெற்றெடுத்த குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்ற செய்தி அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது அகர்தலா அரசு மருத்துவக் கல்லூரியில் (ஏஜிஎம்சி) கொரோனா வைரஸின் இரண்டு அலைகளின் போது குறைந்தது 225 கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவித்திருக்கிறார்கள். மேலும் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு பிரசவத்திற்கு பிந்தைய வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா முதல் அலையின் போது 198 கொரோனா தொற்றுள்ள பெண்கள் குழந்தைகளைப் பெற்றெடுத்தனர், அவர்களில் 60 பேருக்கு சிசேரியன் என்றும், 2 வது அலையின் போது இந்த எண்ணிக்கை 27 ஆக இருந்தது எனவும் ஏ.ஜி.எம்.சியின் மகப்பேறியல் மற்றும் பெண்ணோயியல் துறையின் தலைவர் டாக்டர் ஜெயந்தா ரே கூறியுள்ளார்.

மேலும் அவர் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களால் எடுக்கப்பட்ட மிகுந்த கவனிப்பு காரணமாகவே 225 கொரோனா பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பிரசவித்தனர் என்று கூறியுள்ளார். இருப்பினும் பாதிக்கப்பட்ட தாய்மார்களுக்கு புன்னகையை கொண்டு வருவது மருத்துவர்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏஜிஎம்சி மருத்துவமனையில் இதுபோன்ற வழக்குகளை கையாளும் சில மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனர், இருப்பினும் குழந்தைகளுக்கு அந்த தொற்றினால் பாதிப்பு இல்லாதவாறு மிகுந்த கவனத்துடன் செயல்பட்டதாக ஜெயந்தா ரே கூறியுள்ளார்.

Published by
Hema

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

13 hours ago