கேரளாவில் ஒரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால்,அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2000-ஐ கடந்தது.
கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஓரே நாளில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,005 ஆக அதிகரித்துள்ளது.
அதில் 73 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்றும், 15 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 3 பேர் என மொத்தம் 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா தோற்றால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, இன்று ஒரே நாளில் 11 பேர் வீடுதிரும்பிய நிலையில், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 814 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 1,174 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தில் பெரும் கனவுடன் அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சஜி, மாரடைப்பால் மறைந்தது அக்கட்சியினரை சோகத்தில்…
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு…
சென்னை : நேற்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் 2025 - 2026 தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து இன்று வேளாண்…