இந்தியாவை சேர்ந்த ஏஜென்சிகள் மூலம் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் நாளை முதல் மனித சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதற்காக கொரோனா பாதிக்காத தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய மருத்துவ கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் உடன் இணைந்து பாரத் பயோ டெக் நிறுவனம் இணைந்து கோவாக்சின் எனும் கொரோனா தடுப்பு மருந்தினை கண்டுபிடித்துள்ளது. இதனை மனித சோதனைக்கு உட்படுத்த ஐ.சி.எம்.ஆர்-ஆனது, தேர்ந்தெடுத்த 12 நிறுவனங்களில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகமும் ஒன்றாகும்.
375 தன்னார்வலர்கள் முதற்கட்ட, மற்றும் இரண்டாம் கட்ட மனித சோதனைக்கு உட்படுத்த படுகின்றனர். அதில், 100 தன்னார்வலர்கள் நாளை முதல் எய்ம்ஸ் மருத்தவ ஆராய்ச்சி குழுவில் பங்கேற்க உள்ளனர்.
இந்த கொரோனா தடுப்பூசி மனித சோதனையில் பங்கேற்க நினைக்கும் தன்னார்வலர்களுக்கு இதற்கு முன்னர் கொரோனா பாதித்து இருக்க கூடாது. அவர்கள் 18 முதல் 55 வயது இருக்க வேண்டும்.மேலும் விபரங்கள் அறியவும், இந்த மனித சோதனையில் பங்கேற்கவும், Ctaiims.covid19@gmail.com இல் மின்னஞ்சல் மூலமாகவோ, 7428847499 என்ற எண்ணிற்கு அழைத்தும் தன்னார்வலர்கள் இந்த மனித சோதனையில் பங்கேற்கலாம்.
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை கொண்டு நாளை முதல் கோவாக்சின் மருந்துக்கான மனித சோதனை டெல்லி எய்ம்ஸ் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் தொடங்க உள்ளது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…