பிரியங்கா காந்தியை அரசு பங்களாவில் இருந்து காலி செய்ய உத்தரவு.! லக்னோவில் குடியேற்றம்.!

Published by
Ragi

டெல்லியில் உள்ள அரசு பங்களாவில் இருந்து பிரியங்கா காந்தியை காலி செய்ய கோரி உத்தரவிட்டதை அடுத்து உ. பி-யின் லக்னோவில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி தங்கி வந்த அரசு பங்களாவை காலி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்றும், ரூ. 3.46 லட்சம் வீட்டு பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்காக செலுத்த வேண்டும் என்று மத்திய நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது டெல்லியில் பிரியங்கா காந்தி வசித்து வரும் லோதி பங்களாவை காலி செய்ய முடிவு செய்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் உள்ள லக்னோவிற்கு இடமாற்றம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. கோகலே மார்க்கில் உள்ள ஷீலா கவுலுக்கு சொந்தமான வீட்டில் தங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 2015-ல் காலமான கவுல் இந்தியாவின் முதல் பிரதமரும், பிரியங்காவின் பெரிய தாத்தாவுமான ஜவஹர்லால் நேருவின் மைத்துனர் என்பது குறிப்பிடத்தக்கது. கவுல் ஒரு காலத்தில் மத்திய அமைச்சராகவும், ஆளுநராகவும் இருந்துள்ளார்.

மேலும் பிரியங்கா காந்தி உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் போது செயலாளராக இருப்பதால் லக்னோவில் குடியேறுவதன் மூலம் கட்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட முடியும் என்று கணித்து முடிவு செய்துள்ளார். தற்போது பிரியங்கா தனது லோதி பங்களாவில் உடமைகளை மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வந்ததும் லக்னோவிற்கு குடியேறுவார் என்று கூறப்படுகிறது.

Published by
Ragi

Recent Posts

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்! 

நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் பெயரில் பதியப்பட்ட வழக்குகளை முடித்து வைக்க வேண்டும் என சென்னை…

5 hours ago

சிறுமி மீது தவறு? சர்ச்சை பேச்சு எதிரொலி.! மயிலாடுதுறை ஆட்சியர் அதிரடி மாற்றம்!

மயிலாடுதுறை : கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் செயல்பட்டு வந்த அங்கன்வாடியில் பயின்று வந்த…

7 hours ago

தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி உள்ள திரைப்படம் குட் பேட் அக்லி.…

9 hours ago

AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!

லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 10வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று விளையாடுகின்றன. இந்தப் போட்டி…

9 hours ago

“கைதுக்கு நான் பயப்படவில்லை. இப்போதே விசாரணைக்கு தயார்” சீமான் பரபரப்பு பேட்டி!

சென்னை : நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் வழக்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு நேரில் ஆஜராக…

10 hours ago

“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!

தருமபுரி : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் வழக்கு பதிவு செய்திருந்தார். இந்த…

12 hours ago