விவாகரத்து பெற்ற பெண் கணவருக்கு ஜீவனாம்சம் வழங்க கோர்ட் உத்தரவு…!

Published by
Rebekal

மும்பையில் வசித்து வரும் ஆசிரியை கடந்த 1992-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டுள்ளார். இவருக்கு ஒரு மகளும் உள்ளது. பல ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பின்பதாக தற்பொழுது ஆசிரியை மற்றும் அவரது கணவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளது.

எனவே தனது கணவனை விட்டுப் பிரிய வேண்டும் என விவாகரத்து கேட்டு ஆசிரியை நீதிமன்றம் சென்றுள்ளார். அப்பொழுது தனது கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து கிடைத்து இருவரும் பிரிந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

தற்பொழுது தனது மனைவியிடம் இருந்து தனக்கு 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சம் பெற்றுத்தர வேண்டும் என்று விவாகரத்து பெற்ற ஆசிரியையின் கணவர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான மனுவில் தனக்கு எவ்வித வருமானமும் இல்லாத பட்சத்தில் தனது மனைவி படிக்க வேண்டும் என்பதற்காக நான் வீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்பொழுது எனக்கு என்று எதுவும் கிடையாது, நோய்வாய்ப்பட்டு தவிக்கும் எனக்கு மாதம்தோறும் எனது மனைவியிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் ஜீவனாம்சமாக பெற்று தரவேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது ஆஜராகிய ஆசிரியை தனது கணவர் மளிகை கடை மற்றும் சொந்தமாக ஒரு ஆட்டோவும் வைத்திருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

எனவே அந்த ஆட்டோவை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டி வருவதாகவும், மகளை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு தனக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன் தன்னைப் பராமரித்துக் கொள்வதற்கு ஆசிரியையாக பணியாற்ற கூடிய மனைவி 3 ஆயிரம் ரூபாய் நிரந்தர ஜீவனாம்சமாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர்.

Recent Posts

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி பலமாக இருப்பதாக திருமாவளவன் சொல்லிவிட்டார்.. – தமிழிசை பேச்சு!

சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…

13 minutes ago

live : அரசியல் நிகழ்வுகள் முதல்…பெல்ஜியம் ரேஸிலும் அசத்திய அஜித் குமார் அணி வரை!

சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…

55 minutes ago

திரும்பி பார்முக்கு வந்த ஹிட் மேன்! ரோஹித் ஷர்மாவை புகழ்ந்து தள்ளிய வீரர்கள்!

மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…

2 hours ago

இந்தியாவுக்கு விசிட் அடிக்கும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்! என்ன காரணம்?

டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…

2 hours ago

GT4 ஐரோப்பிய கார் ரேஸில் மாஸ் காட்டிய அஜித் அணி! 2-வது இடத்தை பிடித்து சாதனை!

பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

3 hours ago

“என் போனை ஒட்டு கேக்குறாங்க” நயினார் மாதிரி தான் எனக்கும் – சீமான் ஆதங்கம்!

சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாகவும், இதற்கு…

3 hours ago