சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  அனுமதி

Default Image

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  ப.சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை  சார்பில் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது .அதில்,அமலாக்கத்துறை மனுவை ஏற்று, அக்டோபர்  24-ஆம் தேதி வரை சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
மேலும் அக்டோபர்  24-ஆம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.இந்த நிலையில் இன்று .சிதம்பரத்தை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது அமலாக்கத்துறை.
இதையடுத்து  ப.சிதம்பரத்திடம் அக்டோபர்  30-ஆம் தேதி வரை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது . ஏற்கனவே 7 நாட்கள் விசாரணை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது 30-ஆம் தேதி வரை  நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்