மத்தியஅரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றிக்கு எதிராக நாட்டில் பல இடங்களில் பேரணிகளும் , போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவளர்களுக்கும் , எதிர்ப்பாளர்களுக்கு இடையே நடந்த மோதலில் நேற்று வரை 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த 20-ம் தேதி குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடந்தது. இந்த பேரணியில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவர் ஓவைசி கலந்து கொண்டார்.
இந்த பேரணியில் அமுல்யா லியோனா என்ற இளம்பெண் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என கோஷம் எழுப்பினார். அவரை தடுத்து ஓவைசி நிறுத்தினார்.பின்னர் இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில் பெங்களூரு நீதிமன்றம் அமுல்யாவின் நீதிமன்ற காவலை மார்ச் 5-ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…