ராஜஸ்தானில், திருமணம் நடைபெறும் நாள் அன்று மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் ஷாபாத் நகரின் பரா பகுதியில் வசித்து வரக்கூடிய இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சோதனைகளை முடித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடைபெறக்கூடிய நாளில் வெளியாகிய கொரோனா பரிசோதனையின் முடிவில் மணமகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததையடுத்து மணமக்கள் இருவருக்கும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் முறையாக திருமணத்திற்கான சடங்குகளை முடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முக்கியஸ்தரும் தனிநபர் தடுப்பு பாதுகாப்பு உடைகளை அணிந்தே திருமணம் நடத்தி வைத்துள்ளார். மக்கள் கூடுகை தவிர்க்கப்பட்டு இருந்தாலும் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…