புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் 2 தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யவேண்டும் என்றும் நெகடிவ் சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், புதுச்சேரி தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க உள்ள வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை முகாம் அமைத்து, பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்திருந்தது. இதனையடுத்து இன்று புதுச்சேரியில் ஒரே நேரத்தில் 7 தொகுதிகளை சேர்ந்த வேட்பாளர்கள், முகவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் 110 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில், புதுச்சேரியில் வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க இருந்த 8 முகவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிந்து, உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…