#BiharElectionResults : வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

Default Image

243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கு , மூன்று கட்டமாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட வாக்குபதிவில் 55.69% வாக்குகளும்,இரண்டாம் கட்டமாக  நடைபெற்ற  வாக்குபதிவில் 55.70% வாக்குகளும்,  இறுதிக்கட்ட வாக்குபதிவில் 57.91% வாக்குகளும் பதிவாகியது.

இந்த தேர்தலில் முக்கியமாக 2 கூட்டணிகள் கருதப்படுகிறது. அது, தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மெகா கூட்டணி. ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan)  என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் வாக்கு எண்ணிக்கைகாக 38 மாவட்டங்களில் 55 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.தற்போது வாக்கு  எண்ணிக்கை தொடங்கியுள்ளது .முதல்கட்டமாக பீகாரில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுவருகின்றது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்