நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.
இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும். EOS – 3 செயற்கோளை பூமியை கணிப்பதில் துல்லியமானது என்பதால் வானில் இருக்கக்கூடிய கண் என்று அழைக்கப்படுகிறது. EOS – 3 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது, மேலும் இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.
சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இந்த செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளது. மேலும், GSLV F-10 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைகோளில் முதல்முறையாக வெப்பத்தில் இருந்து செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ‘EOS -3’ என்ற செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GSLV ரகத்தின் உள்ள ராக்கெட்டின் மூலமாக செலுத்தப்பட உள்ள 14ஆவது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…
சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…
சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…
சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…