சினிமா

Chandrababu Naidu Arrest : குடும்ப விழா இருந்ததால் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க முடியவில்லை! நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!

Published by
பால முருகன்

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த 9-ஆம் தேதி 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் கைது செய்யப்பட்டார். சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சி காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க விவகாரத்தில் பல கோடி ரூபாய் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அவர் மீது ஆந்திர மாநில காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

மேலும் அவர் மீது 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பது உறுதியானது. இதனை தொடர்ந்து குற்றப் புலனாய்வுத் துறையினர் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர்.

இதனையடுத்து, சந்திரபாபு கைதுக்கு பலரும் கண்டனங்கள் மற்றும் அவருக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு மகன் லோகேஷுற்கு போன் செய்து மக்கள் நலனுக்காக எப்போதும் போராடுபவர் சந்திரபாபு பொய் வழக்குகள் அவரை எதுவும் செய்யாது சந்திரபாபு நாயுடு அவரது நற்செயல்களும், தன்னலமற்ற பொது சேவையும் சிறையிலிருந்து அவரை பத்திரமாக வெளியே கொண்டு வரும்  என ஆறுதல் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க திட்டமிட்டு இருந்ததாகவும் குடும்ப விழா இருந்த காரணத்தால் சந்திக்க முடியாமல் போய்விட்டதாகவும் தெரிவித்துள்ளார். சமீபத்தில் கோவை சென்ற ரஜினியை செய்தியாளர்கள் சந்தித்தார்கள். அப்போது ரஜினிகாந்த் சந்திரபாபு நாயுடு குறித்து பேசினார்.

அதில் ” ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நான் சந்திக்க இருந்தேன். ஆனால், குடும்ப விழா காரணமாக  செல்ல முடியவில்லை” என கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

IND v ENG : இங்கிலாந்தை சுருட்ட களமிறங்கும் வருண் சக்கரவர்த்தி! சம்பவம் லோடிங்..

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…

14 hours ago

“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!

சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…

14 hours ago

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

16 hours ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

16 hours ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

16 hours ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

17 hours ago