கொரோனாவுக்கு கொடுக்காபுளி-சி.வெங்காயம் சாப்பிடுங்க..கிட்டக்கவே வராது..புதுவை எம்எல்ஏவின்- புதுயோசனை !

Default Image
கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனா வராது என்று புதுவை மாநில எம்எல்ஏ ஜான் குமார் புதுவித யோசனை தெரிவித்துள்ளார். 
 
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் மகளிர் தினவிழாவானது ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இவ்விழாவில் பேசிய  ஜான்குமார் எம்.எல்.ஏ. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனை தடுக்க எளிய வழிமுறைகள் இருக்கிறது.அவை  கொடுக்காபுளி அல்லது காட்டு நெல்லிக்காய் அல்லது சின்ன வெங்காயத்துடன் பூண்டு சேர்த்து சாப்பிட்டால் கொரோனாவைரஸ் வராது. பழையசோறும், பழவகைகளும் தினமும் சாப்பிட்டு வந்தால் கொரோனா மட்டுமல்ல மரணம் கூட வராது. இது தவிர நாள்தோறும் காலையில் அரை மணி நேரம், மாலையில் அரை மணி நேரம் வெயிலில் நிற்க வேண்டும் என்று  மாணவிகள் மத்தியில் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்