ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள், தான் வேலை செய்யும் மருத்துவமனையில் இல்லை என்று குற்றம் சாட்டிய அரசு மருத்துவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சாலையில் கிடந்ததால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நரசிபட்டினம் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் சுதாகர் என்பவர், கடந்த சில தினங்களுக்கு முன் தான் பணியாற்றும் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மாஸ்க் உள்ளிட்ட உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்காக அவரை ஆந்திர மாநில சுகாதாரத்துறை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பின், அவர் எங்கு சென்றார், என்ன ஆனார்? எங்கு இருக்கிறார்? என்று தெரியாத நிலையில், தற்போது டாக்டர் சுதாகர் நேற்று மாலை நரசிபட்டினம் அருகே சாலையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் ஒரு லாரி ஒன்றின் முன் பரிதாபமாக கிடந்தார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அவரை மீட்டு நரசிபட்டினம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…