பிளாட்பாரத்தில் அமர்ந்து புலம் பெயர்ந்த தொழிலாளர்களிடம் குறைகளை கேட்ட ராகுல் காந்தி…

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக வேலைவாய்ப்புகளை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு வாகன வசதிகள் இல்லாத காரணத்தால் நடந்தே செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஹரியானாவிலிருந்து சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியபிரதேசத்தை நோக்கி நடந்து செல்லும்போது, அவர்களை டெல்லியின் சுக்தேவ் விஹார் மேம்பாலம் பகுதி அருகே காங்கிரஸ்  கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவர்களை சந்தித்துள்ளார்.

அந்த பிளாட்பாரத்தில் அமர்ந்திருந்த மக்களிடம் மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றியவாறு அவர்களுடன் அமர்ந்து பேசியுள்ளார். மேலும், அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான முக கவசம், உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை வழங்கியுள்ளார். மேலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டும் ஏன் நீங்கள் நடந்து செல்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தருவதாக தொழிலாளர்களிடம் உறுதியளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்