குறுகிய காலத்தில் 10 கோடி பயனாளர்களை தொட்ட ஆரோக்கிய சேது செயலி…

Default Image

நமது பாரத பிரதமரால் அறிவிக்கப்பட்ட செயலியான ஆரோக்கிய சேதுவை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக தொற்று உள்ளவர்கள் வசிக்கும் பகுதியை கண்டறிய உதவும் வகையில் ஆரோக்கிய சேது செயலியை  கடந்த மாதம் மத்திய  அரசின் சார்பில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை பதிவிறக்க மத்திய அரசு ஊழியர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதையடுத்து இந்த செயலி அறிமுகம் ஆன 13 நாட்களில் இந்த செயலியை  பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 5 கோடியாக இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த செயலியை  பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் இந்த செயலி அறிமுகமான குறுகிய காலத்தில் அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் செயலிகளில் ஒன்று என்ற பெருமையை தற்போது ஆரோக்கிய சேது பெற்றுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்