கை கொடுக்கும் ஆரோக்கிய சேது செயலி ! சுமார் 9.6 கோடி பேர் பதிவிறக்கம்

Default Image

கொரோனா வைரஸ் தொற்று  குறித்த விழிப்புணர்வு தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்காக இந்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ஆரோக்கிய சேது என்ற செயலி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த செயலியை அரசு, தனியார் ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஓர் உத்தரவும் பிறப்பித்தது. இதுவரை  இந்த செயலியை சுமார் 9.6 கோடி பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த செயலியானது, கொரோனா  வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அருகில்  செல்லும்போது இந்த செயலி எச்சரிக்கை விடுக்கும். அந்த வகையில் இந்தசெயலி மூலம் புதிதாக 300 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த ஆரோக்கிய சேது செயலியை  பதிவிறக்கம் செய்தவர்களில் 34 லட்சம் பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக தாங்களாகவே முன்வந்து தகவல் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் எந்தப்பகுதியில் அதிக பரிசோதனைகளை நடத்த வேண்டும். யாருக்கு பரிசோதனை நடத்த வேண்டும் என்பதை எளிதாக முடிவு செய்ய முடியும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்