மத்திய பிரதேச எல்லையை மூடிய உத்திர பிரதேசம்… சொந்த ஊருக்கு செல்ல முயன்றோர் எதிர்ப்பு தெரிவித்து காவலர்கள் மீது கல்வீச்சு…

Published by
Kaliraj
உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்ந்த கூலி  தொழிலாளர்கள்  தாங்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சமீபத்தில் சிறப்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், தற்போது  மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான்  அரசு பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தங்கள் மாநில தொழிலாளர்களை மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தினுடனான எல்லையை உத்தர பிரதேச அரசு மூடியது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பர்வானி மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் இணைந்து பர்வானி எல்லையில் காவலர்கள்  அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவலர்கள் மீது நடத்திய  கல்வீச்சில் 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Recent Posts

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

”விஜயால் நல்லது நடந்தால் சந்தோஷம்” – ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்.!

திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…

8 hours ago

மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…

9 hours ago

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

9 hours ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

11 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

11 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

12 hours ago