மத்திய பிரதேச எல்லையை மூடிய உத்திர பிரதேசம்… சொந்த ஊருக்கு செல்ல முயன்றோர் எதிர்ப்பு தெரிவித்து காவலர்கள் மீது கல்வீச்சு…

Published by
Kaliraj
உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளி மாநிலங்களில் தவிக்கும் புலம்பெயர்ந்த கூலி  தொழிலாளர்கள்  தாங்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்ப மத்திய அரசு சமீபத்தில் சிறப்பு அனுமதி அளித்தது. இந்நிலையில், தற்போது  மத்திய பிரதேச முதலமைச்சர்  சிவராஜ் சிங் சவுகான்  அரசு பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள தங்கள் மாநில தொழிலாளர்களை மீண்டும் தங்கள் மாநிலத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமித்தது. இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தினுடனான எல்லையை உத்தர பிரதேச அரசு மூடியது. இதை தொடர்ந்து நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பர்வானி மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இந்நிலையில், பீகார், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசத்தை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் அனைவரும் இணைந்து பர்வானி எல்லையில் காவலர்கள்  அனுமதி மறுத்ததை கண்டித்து நேற்று அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவலர்கள் மீது நடத்திய  கல்வீச்சில் 3 காவலர்கள் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

7 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

15 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago