டெல்லிவாசிகள் கொரோனாவுடன் வாழ தயாராகுங்கள்… மாநில மக்களுக்கு கெஜ்ரிவால் அறிவுரை…

Published by
Kaliraj

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர்.மக்கள் மட்டுமின்றி அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று  தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகிறது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அம்மாநில  முதலமைச்சர்  அரவிந்த் கெஜ்ரிவால் காணொலி காட்சி வாயிலாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், டெல்லியில் உள்ள 11 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளை  மட்டுமே சிவப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும், ஒட்டுமொத்த மாவட்டத்தையும் அறிவிக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு நாம்  பரிந்துரை விடுப்போம். தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ்  பாதிப்பே இல்லை என்ற நிலை தற்போது வரும் என்பது  சாத்தியமில்லாதது. ஏனெனில், நாடு முழுவதும் அப்படி ஒரு நிலை இல்லை. எனவே மக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுடன்  வாழ  தயாராக வேண்டும். டெல்லி முழுவதையும் சிவப்பு மண்டலமாக  மத்திய அரசு அறிவித்துள்ளது.  எனவே  சந்தைகள், மால்களை திறக்க முடியாது. கடைகள் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகர்கள் மற்றும் தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

வேலை இழந்தவர்கள் நகரத்தை விட்டு வெளியேறுகிறார்கள். இன்னும் பலர் இங்கிருந்து வெளியேற விரும்புகிறார்கள். நீண்ட நாள்களுக்கு டெல்லியால் இந்தப் பிரச்சனையைத் தாங்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர்,  பொது இடங்களில் எச்சில் உமிழ்போர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,  மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள்  யாரும் வெளியே வர அனுமதி கிடையாது என்றும்   அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் நாளை முதல் செயல்படும். ஆனால், விமானம், மெட்ரோ, பேருந்து போக்குவரத்து ரத்து நீடிக்கும் என்று அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார். 

Published by
Kaliraj

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

7 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

7 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

7 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

7 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

8 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

8 hours ago