கொரோனாவின் பிடியில் சிக்கி 14 மாத ஆண் குழந்தை பரிதாப பலி…

Default Image

குஜராத் மாநிலத்தின்  ராம்நகர்  பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம்  5ஆம் தேதி  14 மாதமே ஆன ஒரு ஆண்  குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. எனவே, அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த ஆண் குழந்தை வெளிமாநில தொழிலாளியின் மகன் ஆவார். மேலும்  இந்த குழந்தைக்கு கொரோனா தொற்று எந்த பயண விவரமும் இல்லாமல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ராம்நகர் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருந்த அந்த ஆண்   குழந்தை சிகிச்சை பலனில்லாமல் குழந்தை உயிரிழந்ததாக கூறப்பபடுகிறது. மேலும் அந்த ஆண் குழந்தை 2 நாட்களாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த குழந்தையின்  உடலில் பல உறுப்புகள் செயலிழந்ததால் அந்த குழந்தை உயிரிழந்ததாக மருத்துவமனையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்