கொரோனா வைரஸ் சீனாவின் உயிரி போர்… சீனாவிற்கு கடும் தண்டனை வழங்கவேண்டும்… சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் அறிக்கை…

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் தொற்றை உலகில்  பரப்பி மனித குலத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு  பயங்கரமான குற்றம் புரிந்த சீனாவுக்கு ஐநா மனித உரிமை ஆணையம் கடும் அபராதம் விதிக்க வேண்டும், என சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து லண்டனை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நீதிபதிகள் கவுன்சில் தலைவர் ஆதிஷ் அகர்வாலா அறிக்கை ஒன்றை வெளியிட்டார், இதில்,  கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் சீன அரசின் செயலற்ற தன்மையால் இன்று உலகமே பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் நோயால் பாதித்தும், ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் வருகின்றனர்.
 கோடிக்கணக்கான பண இழப்பும், இந்தியா உள்ளிட்ட இதர நாடுகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

      இந்த வைரஸ் சீனாவின் அனைத்து மாகாணங்களுக்கும் பரவாத நிலையில்,  இந்த வைரஸ், உலகில் அனைத்து நாடுகளுக்கு மட்டும் பரவுவது மட்டும் இன்னும் பெரிய மர்மமாகவே உள்ளது. உலகம் முழுவதும் 60 ஆயிரம் பேரை பலி கொண்ட இந்த வைரஸ் பரவ, சீன ராணுவமும் வுகான் நகரமும்தான் காரணம். எனவே, இந்த விஷயத்தில் ஐநா மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும். ஒட்டு மொத்த உலகுக்கும் குறிப்பாக இந்தியாவுக்கும் இழப்பீடு தொகையை சீனா செலுத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்,

     மேலும், சீனா  உலகின் மிகப்பெரிய வல்லரசாக தன்னை நிலைநிறுத்தவும், ‘பயோவார்’ எனப்படும் உயிரி போர் மூலம் மற்ற நாடுகளை கட்டுப்படுத்தவும் நினைக்கிறது, கொரோனா ஒரு தொற்றுநோய் அல்ல என ஆரம்பகட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தையே சீனா தவறாக வழிநடத்தி உள்ளது. உலக சுகாதார நிறுவனத்தையும், இதர உலக நாடுகளையும்  எச்சரிப்பததில் சீன அரசும் அதன் அதிகாரிகளும் தோல்வி அடைந்துள்ளனர். இதில் அனைத்து சட்ட விதிகளையும் மீறிய சீனா வெளிப்படையாக தகவல்களை வெளியிடாமல் மனித உரிமையைய்யும்  மீறி உள்ளது. எனவே சீனா மனித குலத்துக்கு எதிராக மிகப்பெரிய பயங்கர குற்றத்தை இழைத்துள்ளது. இதற்காக உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தின் 25(1)வது பிரிவின் கீழ் சீனாவுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  இதேபோல், பாகிஸ்தான் தரப்பில், விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என பாகிஸ்தான் எம்பி ரஹ்மான் மாலிக், ஐநா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டரசுக்கு எழுதிய கடிதத்தில், ‘கொரோனா வைரஸ் இயற்கையிலே உருவானதா? அல்லது பயோலாஜிக்கல் வார் போல  மனிதனால் உருவாக்கப்பட்டதா?, அதன் பிறப்பிடம் எது என்பது குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்க வேண்டும்,’ என வலியுறுத்தி உள்ளார். தற்போது உலக நாடுகள் சீனாவிற்கு எதிராக சாட்டையை சுழற்ற தொடங்கியுள்ளனர்.

Published by
Kaliraj

Recent Posts

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

‘உலகத்திற்கே நன்மை ஏற்பட்டுள்ளது’! சின்வர் மரணம் குறித்துப் பேசிய கமலா ஹாரிஸ் !!

வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…

40 mins ago

நெய்தல் படை., பினராயி விஜயனை பார்த்து சிரிக்க வேண்டியதுதானே.? சீமான் ஆவேசம்.!

விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…

43 mins ago

வைரலான ‘சம்பவம்.,’ உஷாரான புஸ்ஸி ஆனந்த்.! தவெக மீட்டிங்கில் கூறிய வார்த்தை..,

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…

2 hours ago

சிறகடிக்க ஆசை சீரியல் -முத்து மீது பழி போடும் மனோஜ்..

சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…

2 hours ago

SL vs WI : கிரிக்கெட் வரலாற்றில் இதுவே முதல் முறை! தொடரைக் கைப்பற்றி இலங்கை அணி அசத்தல்!

தம்புல்லா : வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. அதில், 3 டி20 போட்டிகள் மற்றும் 3…

2 hours ago

காற்று மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசின் ஐடியா.! வீதி வீதியாய் வரும் வாகனம்…

டெல்லி :  தலைநகர் டெல்லியின் மிகப் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது காற்று மாசு. கடந்த சில ஆண்டுகளாக இதனை…

3 hours ago